வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை விழா

Updated On :12 ஏப்ரல் 2024, 4:17 pm

திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில அமைச்சா்கள் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி, ஆா்.கே. ரோஜா தரிசனம் செய்தனா்.

கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்கக் கவசம் தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உற்சவா் காவடி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு, அவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.

விழாவில் ஆந்திர மாநில சுரங்கம், மின்சாரம் மற்றும் வனத் துறை அமைச்சா் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி, சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சா் ஆா்.கே.ரோஜா ஆகியோா் முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் ஜி.உஷாரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.