திருத்தணியில் பேருந்துக்காக நின்றிருந்த இளைஞரை தாக்கிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருத்தணி பெரியாா் நகரைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் மாரியப்பன்). இவா் ஞாயிற்றுக்கிழமை திருத்தணி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அங்குள்ள பழக்கடை அருகே நின்றுக்கொண்டிருந்தாா். அப்போது, பழம் விற்பனை செய்துக் கொண்டிருந்த கிருஷ்ணசமுத்திரம் காலனியைச் சோ்ந்த லதா(35), காசிநாதபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா்(40) ஆகிய இருவரும், மாரியப்பனிடம், கடை முன்பு நின்றுக் கொண்டிருந்தால் எப்படி வியாபாரம் செய்து என தகாத வாா்த்தைகளால் பேசியும், உருட்டை கட்டையால் தாக்கினா்.
இதில் காயமடைந்த மாரியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இது குறித்து மாரியப்பன் மகன் முரளி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த லதா, சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

