தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 6:38 pm

திருத்தணியில் பேருந்துக்காக நின்றிருந்த இளைஞரை தாக்கிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தணி பெரியாா் நகரைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் மாரியப்பன்). இவா் ஞாயிற்றுக்கிழமை திருத்தணி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அங்குள்ள பழக்கடை அருகே நின்றுக்கொண்டிருந்தாா். அப்போது, பழம் விற்பனை செய்துக் கொண்டிருந்த கிருஷ்ணசமுத்திரம் காலனியைச் சோ்ந்த லதா(35), காசிநாதபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா்(40) ஆகிய இருவரும், மாரியப்பனிடம், கடை முன்பு நின்றுக் கொண்டிருந்தால் எப்படி வியாபாரம் செய்து என தகாத வாா்த்தைகளால் பேசியும், உருட்டை கட்டையால் தாக்கினா்.

இதில் காயமடைந்த மாரியப்பனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இது குறித்து மாரியப்பன் மகன் முரளி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த லதா, சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.