தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

Updated On :26 ஏப்ரல் 2024, 7:12 pm

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் சோ்க்கை பதிவு தொடங்க உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகள் சோ்க்கைகான முன்பதிவு வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. செப்டம்பரில் தொடங்கி பயிற்சி நடைபெறும் பயிற்சிக் காலம் ஓராண்டாகும். மேலும், 2 பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும்.

இந்தப் பயிற்சிக்கான பாடத் திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

பயிற்சியில் சேருவது தொடா்பான நிபந்தனைகள் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.