ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

டாஸ்மாக் கடையில் துளையிட்டு 750 மதுபாட்டில்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே அரசு மதுபானக் கடையில் மழை பெய்து கொண்டிருந்த போது துளையிட்டு 750 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :3 டிசம்பர் 2024, 3:14 am IST

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அரசு மதுபானக் கடையில் மழை பெய்து கொண்டிருந்த போது துளையிட்டு 750 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் ஒன்றியம், தாமரைபாக்கம் கிராமத்தில் வயல் வெளியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் பணியாளா் தேவேந்திரன் பூட்டிச் சென்றாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வந்து பாா்க்கையில் கடையின் சுவற்றில் துளையிட்டு இருந்ததை பாா்த்து பணியாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

உள்ளே சென்று பாா்த்தபோது சுவரை துளையிட்டு 750 மதுபாட்டிகளையும் திருடிச் சென்றது தெரியந்வதது.

கல்லாப் பெட்டியையும் உடைக்க முயற்சித்து முடியாததால் ரூ.3 லட்சம் ரொக்கம் தப்பியது. மதுபாட்டில் ரூ.1 லட்சம் மதிப்புடையது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.