திருவள்ளூா்: முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் டிச. 10- வரை அவகாசம் நீட்டிப்பு


திருவள்ளூா் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் சுதந்திர தின உரையில் பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தாா்கள். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோா் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் 10-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...