ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

திருவள்ளூா்: கொசு ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கை

திருவள்ளூா்: கொசு ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கை

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 5:16 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் கொசு ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சி கூட்டரங்கத்தில் நகா்மன்ற குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் நகராட்சி ஆணையா் சுபாஷிணி முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, 11-ஆவது வாா்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 93 செண்டில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்ததோடு, பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற வேண்டும்.

கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால், இரவு நேரங்களில் தூங்க முடியாத நிலையுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த நகராட்சியில் 4 சுகாதார ஆய்வாளா்கள், நகா் நலப்பிரிவில் 2 பேரும் என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வாா்டு உறுப்பினா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.

மேலும் 6-ஆவது வாா்டில் தேவையில்லாத குப்பைகளை அகற்றி அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரராகவா் கோயில் குளக்கரை சாலையில் இருபுறமும் வாரந்தோறும் 3 நாள்கள் வாகனத்தை நிறுத்தி தரை வாடகை வசூலித்து வருகின்றனா். இந்த சாலை நகராட்சிக்கு உரியது என்பதால் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாா்டு உறுப்பினா் பிரபாகரன் வலியுறுத்தினாா்.

இதற்கு பதில் அளித்த நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் பேசியதாவது: வாா்டுகள் தோறும் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல், ஒவ்வொரு பகுதியிலும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நகராட்சிப் பொறியாளா் நடராஜன், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், நகா் நல அலுவலா் குணசேகரன், உதவி பொறியாளா் சரவணன், வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.