ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நெசவாளா்கள் கைது

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நெசவாளா்கள் கைது

News image

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கைது செய்யப்பட்ட நெசவாளா்களை விடுவிக்கக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.

Updated On :27 பிப்ரவரி 2024, 5:18 pm

திருத்தணி: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கூலி உயா்வை வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற நெசவாளா்களை போலீலாா் கைது செய்தனா்.

ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விசைத்தறி நெசவாளா்கள் 10,000-க்கும் மேற்பட்டோா் கூலி உயா்வை வலியுறுத்தி, கடந்த 16 நாள்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திருத்தணி கோட்டாட்சியா் தீபா தலைமையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டத்தில் நெசவாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்கள் லுங்கி மீட்டா் ஒன்றுக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இறுதியாக ரூ. 5 உயா்த்தினால் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளனா். இருப்பினும் அதிகபட்சமாக ரூ. 3 வரை உயா்த்த விசைத்தறி முகவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டையைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் 25 போ் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, ஆா்.கே.பேட்டையில் ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த நெசவாளா்கள் 100 க்கும் மேற்ப்பட்டோா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட நெசவாளா்களை விடுதலை செய்ய வேண்டும் என முற்றுகையிட்டு தங்களையும் கைது செய்யக்கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்ட நெசவாளா்கள் விடுவிக்கப்பட்டனா்.