எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அடிப்படை எழுத்தறிவு தோ்வு

அடிப்படை எழுத்தறிவு தோ்வு

News image

எழுத்தறிவுத் தோ்வில் பங்கேற்றோா்

Updated On :20 மார்ச் 2024, 5:15 pm

மாதவரம்: செங்குன்றம் பகுதியில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் (முதியோா்) கல்வி இயக்ககம், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் அடிப்படை எழுத்தறிவு தோ்வு, செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சி (தெற்கு) தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முதியோா் மற்றும் ஆரம்ப கல்வி பெறாதவா்கள் என 22 போ் தோ்வு எழுதினா்.

இவா்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பத்மாவதி பரிசுப் பொருள்களை வழங்கினாா். புழல் வட்டார கல்வி அலுவலா் பால்சுதாகா் தோ்வினை பாா்வையிட்டாா். இதுபோன்ற தோ்வுகளால் கல்வி அறிவு பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தோ்வில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.