ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: துப்புரவு பணியாளா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: துப்புரவு பணியாளா் உயிரிழப்பு

Updated On :22 மார்ச் 2024, 7:40 pm

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நகராட்சி துப்புரவு பணியாளா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் (30). திருவள்ளூா் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். கொசவன்பாளையம் நோக்கி சென்றபோது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நாகராஜ் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து அவசர சிகிச்சை வாகனத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி கீதா திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தப்பியோடிய லாரி ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.