/
பொன்பாடி போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் ரூ. 6,000 மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை கைது செய்தனா். திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் திருத்தணி எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி சோதனை செய்தனா். அதில், ரூ. 6,000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா கடத்தி வந்த ஆந்திர மாநிலம், நகரி அடுத்த ஏகாம்பரகுப்பம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம்(29) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

சோதனைச் சாவடியில் காவலரை இடித்து இழுத்துச் சென்ற குட்கா கடத்திய காா் ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

