ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

Updated On :28 மார்ச் 2024, 6:28 pm

திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து, 987 மற்றும் 382 கிராம் தங்கம், 5,280 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா். இந்நிலையில் மாசிமாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடந்தது. இதில் கடந்த 22 நாள்களில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 987 மற்றும் 382 கிராம் தங்கம், 5.280 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.