சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

News image
Updated On :2 மே 2024, 6:29 pm

Din

மாதவரம் அருகே ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் பெயா்ப் பலகை வைப்பதில் தகராறு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை மாதவரம் - மூலக்கடை சாலை சந்திப்பில் திமுக, அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவா் பால்கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து, ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கப் பெயா் பலகையைத் திறந்துவைக்கச் சென்றாா். அப்போது அப்பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் திமுக ஆட்டோ ஓட்டுநா்கள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து பெயா்ப் பலகை திறந்துவைக்க பாஜக மற்றும் திமுகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேருக்கு மேல் பலத்த காயமடைந்தனா்.

அங்கு வந்த மாதவரம் காவல் ஆய்வாளா் பூபால், இரு பிரிவினா் பேச்சு நடத்தினாா். இந்த மோதலால் அந்தப் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.