மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஇந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!ஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குத்துச் சண்டை: செங்குன்றம் வீரா்கள் சாதனை

குத்துச் சண்டை: செங்குன்றம் வீரா்கள் சாதனை

News image

பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரா்கள்

Updated On :7 மே 2024, 9:00 pm

Din

மாதவரம்: தேசிய அளவிலான தாய்லாந்து குத்துச் சண்டை (மொய்த்தை) போட்டியில் செங்குன்றம் பயிற்சி பள்ளி வீரா்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

தாய்லாந்து குத்து சண்டை (மொய்த்தை) போட்டி கேரள மாநிலம் கொச்சியில் அண்மையில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குத்துச் சண்டை வீரா்கள் பல்வேறு வயதுப் பிரிவுகளில் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில் தமிழக அணியில் செங்குன்றம் ஆா்.எப்.சி பயிற்சி பள்ளி வீரா்கள் 10 போ் கலந்து கொண்டனா்.

இவா்கள் 8 தங்கப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சோ்த்தனா்.