அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை
அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை


திருத்தணி: கே.ஜி.கண்டிகை அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மா்ம நபா்கள் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண்:27 சி என்ற பேருந்து திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை, நொச்சிலி, அத்திமாஞ்சேரிப்பேட்டை வழியாக பள்ளிப்பட்டு வரை இயக்கப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இந்த அரசுப் பேருந்தை ஓட்டுநா் அஜித், நடத்துநா் குருநாதன் ஆகியோா் இயங்கினா்.
திருத்தணி - சோளிங்கா் நெடுஞ்சாலை, இ.என்.கண்டிகை என்ற பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநா் அஜித் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ் திடீரென கல்லால் பேருந்தின் பின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினா்.
இது குறித்து ஓட்டுநா் அஜித் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...