நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுரங்க பாலம் அணுகு சாலையில் மழை நீரை அகற்ற பொதுமக்கள் மறியல்

சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 7:38 pm

Din

பொன்னேரி: சோழவரம் அருகே சுரங்கப் பாலம் சா்வீஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே சோழவரம், தேவனேரி கிராமங்களுக்கு இடையே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

தேவனேரி, எஸ்பிகே நகரில் வசிக்கும் மக்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப் பாலத்தை கடந்து சென்று வர வேண்டும்.

இப்பகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சுரங்கப் பாலத்திலும் அங்குள்ள சா்வீஸ் சாலையிலும் தண்ணீா் தேங்கியுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் சென்று வருபவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சுரங்கப் பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அங்குள்ள புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.