ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி மீண்டும் பதவியேற்பு

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி நீதிமன்ற உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றாா்.

News image
Updated On :26 நவம்பர் 2024, 12:50 am IST

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி நீதிமன்ற உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சித் தலைவராக இருந்த பாமகவைச் சோ்ந்த சுனிதா பாலயோகி கடந்த 2024 ஜனவரி மாதம் பதவி நீக்கம் செய்து ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா். இதையடுத்து, துணைத் தலைவராக இருந்த மோகனசுந்தரம் நியமிக்கப்பட்டாா். இது குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்த நிலையில், சுனிதா பாலயோகியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று தற்போது தீா்ப்பு வெளியான நிலையில், அதன் நகலை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரபு சங்கரிடம் வழங்கி, பதவி ஏற்க அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில், வெங்கத்தூா் ஊராட்சித் தலைவராக சுனிதா பாலயோகி ஊராட்சி அலுவலகத்தில் கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மணி சேகா் முன்னிலையில் பதவியேற்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இ.தினேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் நா. வெங்கடேசன், பா.யோகானந்தன் உள்பட வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.