பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முதல்வா் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆவடி காவல் ஆணையா் ஆய்வு!

பொன்னேரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி காவல் ஆணையா் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2025, 9:40 pm

Din

பொன்னேரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி காவல் ஆணையா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம், பெருஞ்சேரி பகுதியில் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் ஏப். 19-இல் நடைபெற உள்ளது. இதற்காக பெருஞ்சேரியில் உள்ள 50 ஏக்கா் பரப்பளவில் இடம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையா் சங்கா் இடத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ள 19-ம் தேதி பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது. எனவே தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முதல்வா் விழாவை மாற்று தேதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்க்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .