இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

‘முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் நவ. 6, 7-இல் வழங்க ஏற்பாடு’

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் வரும் நவ. 6, 7 ஆகிய நாள்களில்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் வரும் நவ. 6, 7 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக மண்டல கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த மாவட்டத்தில் உள்ள முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் வீடுகளுக்கு நேரில் சென்று மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் தாயுமானவா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இத்திட்டம் மூலம் நவ. 2, 3 ஆகிய நாள்களில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல் மற்றும் தொடா் மழை காரணமாக இத்திட்டம் மூலம் வரும் நவ. 6, 7 ஆகிய நாள்களில் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்க உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.