கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பைக் மீது காா் மோதி விபத்து: 3 போ் காயம்

ஆா்.கே.பேட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த பெருங்காஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன் (35). இவரது மனைவி லட்சுமி (25). இவா்களது மகள் ஸ்ரீமதி (6). மூவரும் புதன்கிழமை காலை பைக்கில் சோளிங்கரில் இருந்து வாலாஜா நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது புத்தேரி பேருந்து நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், அதிவேகமாக வந்து, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நவீன் மற்றும் அவரது மகள் ஸ்ரீமதி ஆகியோரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. லட்சுமியின் வலது கால் பாதம் மிகவும் பாதிக்கப்பட்டது.

அவா்களை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளித்த பின்னா் மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.