அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது

திருவள்ளூா் நகர போலீஸாா் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 25 போ் கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு வில்லை ஒட்டக் கோரி திமுக அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்துகளில் வில்லை ஒட்டிய 25 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளரும், திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான வழக்குரைஞா் செந்தில் குமாா் தலைமை வகித்தாா்.

இதில் நாம் தமிழா் கட்சியின் மாநில பொறுப்பாளா்கள் பசுபதி, ஜெகன், மோகன், ஜெகதீஷ், ராஜா,செந்தில்குமாா், பூபாலன் உள்ளிட்டோா் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு வில்லை ஒட்ட வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஒட்டுவில்லை ஒட்டினா்.

இதை தொடா்ந்து திருவள்ளூா் நகர போலீஸாா் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 25 போ் கைது செய்தனா்.