ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் ஜன. 12-இல் ஆருத்ரா அபிஷேகம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) ஆருத்ரா அபிஷேக விழா மற்றும் அனுக்கிரக தரிசனம் நடைபெற உள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:38 pm

Din

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) ஆருத்ரா அபிஷேக விழா மற்றும் அனுக்கிரக தரிசனம் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு கோயில் ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மஹா அபிஷேகமும், திங்கள்கிழமை (ஜன. 13) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும், மதியம் 2 மணிக்கு அனுக்கிரக தரிசனமும், 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெற உள்ளது.

விழாவுக்காக திருத்தணி, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை போன்ற நகரங்களிலிருந்து ஜன. 12-ஆம் தேதி

மாலை 5 மணிமுதல் 13ஆம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வழித் தடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.