சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் ஜன. 12-இல் ஆருத்ரா அபிஷேகம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) ஆருத்ரா அபிஷேக விழா மற்றும் அனுக்கிரக தரிசனம் நடைபெற உள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:38 pm

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) ஆருத்ரா அபிஷேக விழா மற்றும் அனுக்கிரக தரிசனம் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு கோயில் ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மஹா அபிஷேகமும், திங்கள்கிழமை (ஜன. 13) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும், மதியம் 2 மணிக்கு அனுக்கிரக தரிசனமும், 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெற உள்ளது.

விழாவுக்காக திருத்தணி, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை போன்ற நகரங்களிலிருந்து ஜன. 12-ஆம் தேதி

மாலை 5 மணிமுதல் 13ஆம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வழித் தடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.