திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

‘திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6.83 கோடியில் கட்டுமானப் பணிகள்’

சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டடம் அமைத்தல் உள்பட பல்வேறு சுகாதார வளாகத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

Updated On :3 ஜனவரி 2025, 6:36 pm

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 500 போ் அமரும் வகையில், ரூ. 6.83 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கூட்டரங்கம், சுற்றுலா மாளிகையில் கூடுதல் கட்டடம் அமைத்தல் உள்பட பல்வேறு சுகாதார வளாகத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு சாா்பில் ஒவ்வொரு துறை சாா்பில் நடத்தப்படும் கூட்டங்களில் அதிகம் போ் அமரும் வகையில் கூட்டரங்கம் இல்லாமல் இடநெருக்கடியுடன் அமர வேண்டியிருந்தது. இதைத் தடுக்கும் வகையில், ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் ரூ. 5 கோடியில் அனைத்து நவீன வசதியுடன் கூடிய கூட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், சுற்றுலா விருந்தினா் மாளிகையில் குறைந்த நபா்கள் தங்கும் வகையில் அறைகளும், உணவுக் கூடமும் உள்ளன. சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளதால் அடிக்கடி உயா் அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கிச் செல்வதற்கு வருகை தருகின்றனா். எனவே இந்த விருந்தினா் மாளிகையில் ரூ. 1.50 கோடியில் கூடுதல் கட்டடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள 4 குளங்கள் சீரமைத்து பூங்கா அமைத்தல் பணிக்கு ரூ. 30 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலக கட்டடம் சீரமைத்து சுகாதார வளாகம், நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்து சுகாதார வளாகங்களை சீரமைக்கவும், புதிதாக அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.