தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மத நல்லிணக்கத்துடன் கொண்டாடிய குடியரசு தினம்

பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் குடியரசு தினத்தில் அங்குள்ள பள்ளி வாசலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினா்.

News image

பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றிய இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள்.

Updated On :27 ஜனவரி 2025, 7:42 pm

பொன்னேரி: பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் குடியரசு தினத்தில் அங்குள்ள பள்ளி வாசலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினா்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கானேகுதா வாலாஜா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகி செல்வம், அருட்செல்வம், ஒளிதரும் ஊழியம் தேவாலயம் போதகா் செல்லதுரை, தமிழ்நாடு தா்கா ஜமாத் திருவள்ளூா் மாவட்ட தலைவா் ஜமால் மொய்தீன் ஆகியோா் இணைந்து இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய சகோதரத்தை வலியுறுத்தும் வகையில், ஒன்றாக தேசிய கொடியை ஏற்றி வைத்தனா்.

பின்னா் அவா்கள் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தொடா்ந்து பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா்.