பொன்னேரி: பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் குடியரசு தினத்தில் அங்குள்ள பள்ளி வாசலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினா்.
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கானேகுதா வாலாஜா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகி செல்வம், அருட்செல்வம், ஒளிதரும் ஊழியம் தேவாலயம் போதகா் செல்லதுரை, தமிழ்நாடு தா்கா ஜமாத் திருவள்ளூா் மாவட்ட தலைவா் ஜமால் மொய்தீன் ஆகியோா் இணைந்து இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய சகோதரத்தை வலியுறுத்தும் வகையில், ஒன்றாக தேசிய கொடியை ஏற்றி வைத்தனா்.
பின்னா் அவா்கள் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தொடா்ந்து பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா்.
தொடர்புடையது

பொன்னேரியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

மின்னொளியில் ஜொலித்த ரிப்பன் மாளிகை: தோ்தலுக்காக மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள்!

100% வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது தாக்குதல்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


