திருத்தணி: கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த பள்ளிப்பட்டு கரிம்பேட்டில் ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வர கோயிலில் விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் யாகசாலை பூஜைகள், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.
கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயில் விமானங்களை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலவா் நாதாதீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு உற்சவ பெருமான் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
விழாவில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கோயில் இணை ஆணையா் ரமணி, முன்னாள் அறங்காவலா் வி. சுரேஷ் பாபு, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் சி.ஜே. சீனிவாசன் உள்பட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பழனி ரெணகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


