நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கரிம்பேடு நாதாதீஸ்வா் கோயில் குடமுழுக்கு

கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :8 ஜூலை 2025, 1:38 am IST

திருத்தணி: கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த பள்ளிப்பட்டு கரிம்பேட்டில் ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வர கோயிலில் விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் யாகசாலை பூஜைகள், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயில் விமானங்களை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலவா் நாதாதீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு உற்சவ பெருமான் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

விழாவில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கோயில் இணை ஆணையா் ரமணி, முன்னாள் அறங்காவலா் வி. சுரேஷ் பாபு, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் சி.ஜே. சீனிவாசன் உள்பட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.