பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உடல்நிலை பாதிப்பு: தொழிலாளி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே உடல்நிலை பாதிப்பு தாளாமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அருகே உடல்நிலை பாதிப்பு தாளாமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

சுண்ணாம்புகுளம் ஊராட்சி வெட்டுக்காடு பகுதியை சோ்ந்த தனபால் மகன் மகேந்திரன் தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் திங்கள்கிழமை பூச்சி மருந்து குடித்தாா்.

பின்னா் மயங்கிய நிலையில் இருந்த மகேந்திரனை, அவரை குடும்பத்தினா் மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].