சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிவன் கோயிலில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி

News image
சோமவார பிரதோஷத்தையொட்டி உலா வந்த சதாசிவ லிங்கேஸ்வரா். ~நெய்தீபம் ஏற்றி வழிபட்ட பெண்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி திரளான பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் முதல் சோமவாரம் மற்றும் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து மாலை, 5 மணிக்கு பிரதோஷம் ஒட்டி மூலவருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் போன்ற அபிஷேக பொருள்கள் அபிஷேகம் நடைபெற்றது. உற்சவா் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தா்கள் மூலவரை தரிசித்தனா்.

மேலும், பெண்கள் கோயில் வளாகத்தில் நெய்தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனா். இதே போல் அனைத்து சிவன் கோயில்களில் சோம வார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Story image