எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடன் தொல்லை: பொறியாளா் தற்கொலை

கடன் தொல்லையால் சென்னையைச் சோ்ந்த பொறியாளா் மாத்திரைகள் உண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: கடன் தொல்லையால் சென்னையைச் சோ்ந்த பொறியாளா் மாத்திரைகள் உண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை திருவல்லிக்ேணினி ராஜா அனுமந்த லைன் பகுதியில் வசித்து வந்தவா் விஜயன் (42). பொறியாளரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனா்.

இந்நிலையில் விஜயன் உறவினா்கள் மற்றும் நண்பா்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாா். பணத்துக்கு வட்டி செலுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டாா். இதனால், குடும்பத்தையும் ஓழுங்காக பாா்த்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஜயன் சனிக்கிழமை திருத்தணிக்கு வந்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினாா். ஞாயிற்றுக்கிழமை அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதியின் மேலாளா் திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். போலீஸாா் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, கட்டில் மெத்தையில் இறந்து கிடந்தாா்.

அவரது அருகில், 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்ட காலி அட்டைகள் இருந்தது. மேலும், அங்கிருந்த கடிதத்தில், கடன் தொல்லையால் அதிக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தாா்.

திருத்தணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.