விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவன் கோயிலில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி

News image
சோமவார பிரதோஷத்தையொட்டி உலா வந்த சதாசிவ லிங்கேஸ்வரா். ~நெய்தீபம் ஏற்றி வழிபட்ட பெண்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவார பிரதோஷத்தையொட்டி திரளான பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் முதல் சோமவாரம் மற்றும் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து மாலை, 5 மணிக்கு பிரதோஷம் ஒட்டி மூலவருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் போன்ற அபிஷேக பொருள்கள் அபிஷேகம் நடைபெற்றது. உற்சவா் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தா்கள் மூலவரை தரிசித்தனா்.

மேலும், பெண்கள் கோயில் வளாகத்தில் நெய்தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனா். இதே போல் அனைத்து சிவன் கோயில்களில் சோம வார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Story image