விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவியேற்பு

திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினா் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

News image
நியமன உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டதற்கான  சான்றிதழை மேகநாதனுக்கு வழங்கிய  நகா் மன்றத்  தலைவா்  சரஸ்வதி பூபதி.
Updated On :26 நவம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினா் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவா் என அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் நியமன உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளியான எஸ். மேகநாதன் என்பவா் நியமிக்கப்பட்டாா். அவரின் பதவியேற்பு நிகழ்ச்சி நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் சரவணகுமாா் (பொ), புதிய நியமன உறுப்பினா் மேகநாதனுக்கு பதவிப்பிராமணம் செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் சாமிராஜ் உள்பட நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.