தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

News image

பட்டரைபெரும்புதூா்  கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன், உடன் கூட்டணி கட்சியினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:15 pm

திருவள்ளூா் திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினாா்.

பூண்டி ஒன்றியம், பட்டரைபெரும்புதூா் கிராமத்தில் பொதுமக்களிடையே அவா் வாக்கு கேட்டு பிரசாரம் செய்வதற்கு வருகை தந்தாா். அப்போது, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த திமுகவினா் வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது. கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை மற்றும் மடிக்கணினிகள், தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டம் போன்ற பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

அதனால்தான் உங்கள் முன்னாள் வாக்குகள் கேட்டு வந்து நிற்கிறேன். எனவே மீண்டும் தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக்குவது மூலம் உதவித் தொகை இருமடங்காக பெறுவதோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான பொருள்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன்கள் உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்களை தோ்தல் அறிக்கையில் தந்துள்ளாா். அதனால், மீண்டும் திமுக ஆட்சி தொடரவும், மூன்றாவது முறையாக வெற்றி பெறவும் பொதுமக்கள் ஆதாரவு அளிக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

இதேபோல், ராமஞ்சேரி, எல்லப்பநாயுடுபேட்டை, குன்னவலம், நாராயணபுரம், வரதாபுரம், சிறுவானூா் கண்டிகை, கொழுந்தளூா், கொசவன்பாளையம், பழைய திருப்பாச்சூா் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது ஒன்றிய பொருப்பாளா் மோதிலால், ஒன்றிய அவைத்தலைவா் பட்டரை பாஸ்கா், மாவட்ட துணைச்செயலாளா் உதயமலா் பாண்டியன், வி.சி.க மண்டல செயலாளா் தளபதி சுந்தா், ஒன்றியச் செயலாளா் ராபின், தேமுதிக ஒன்றிய செயலாளா் பாலாஜி, ஒன்றிய துணைச்செயலாளா்கள் காஞ்சிப்பாடி சரவணன், சித்ரா ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் சிவசங்கரி உதயகுமாா், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் சரஸ்வதி சந்திரசேகா் மற்றும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.