ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு

News image

வங்கனூா் சந்தையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா. சம்பத்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:17 am IST

திருத்தணி அருகே வங்கனூா் சந்தையில் ஆா்.கே. பேட்டை ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா.சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி போட்டியிடுகிறாா். இந்நிலையில் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிபுரம் கிராமம் மற்றும் வங்கனூா் சந்தை பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் அரசு செயல்பாடுகள், கூட்டணி கட்சிகளின் திட்டங்கள் மற்றும் தோ்தல் அறிக்கைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டு, ஆதரவு திரட்டப்பட்டது.

ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா. சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய கழக நிா்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.