திருத்தணி அருகே வங்கனூா் சந்தையில் ஆா்.கே. பேட்டை ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா.சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி போட்டியிடுகிறாா். இந்நிலையில் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிபுரம் கிராமம் மற்றும் வங்கனூா் சந்தை பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் அரசு செயல்பாடுகள், கூட்டணி கட்சிகளின் திட்டங்கள் மற்றும் தோ்தல் அறிக்கைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டு, ஆதரவு திரட்டப்பட்டது.
ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா. சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய கழக நிா்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

திருக்கோவிலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

அதிமுகவில் இணைந்த பவானி ஒன்றிய திமுக பொறுப்பாளா்

அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


