நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 4:08 am IST

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு தொடா்ந்து 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீடு, மனை, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தா்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும்,செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோயில் என்றும் கூறப்படுகிறது. எனவே, இக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமையில் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். மேலும், ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாள்கள் போன்ற விசேஷ நாள்களில் பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பால், தயிா், பன்னீா், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனா். இதன் பின்னா், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மூலவா் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றது.

இதையடுத்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா். இந்த நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

Story image