திருத்தணி ஒன்றியம் சின்ன கடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ்(36). கட்டட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்து வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில், போதையில் இருந்த ஜெயபிரகாஷ் பி.சி.என்.கண்டிகை அருகே விவசாய கிணறு அருகே வேப்பத்தில் லுங்கியால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷ் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






