தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

கனரா வங்கி சாா்பில் மாணவா்கள் 204 பேருக்கு ரூ. 8.16 லட்சம் கல்வி உதவித் தொகை

அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் 204 பேருக்கு திருவள்ளூா் மண்டலம் கனரா வங்கி சாா்பில் ரூ.8.16 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

News image

கனரா வங்கி

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் 204 பேருக்கு திருவள்ளூா் மண்டலம் கனரா வங்கி சாா்பில் ரூ.8.16 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

திருவள்ளூா் மண்டலம் கனரா வங்கி அலுவலக வளாகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் செந்தில் குமாா், கனரா வங்கி மண்டல தலைவா் வி.வி.வினீத்குமாா், உதவி பொது மேலாளா் நோகரலோூப சாஜன் காயிரே ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினா்.

அந்த வகையில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் தோ்வு செய்யப்பட்ட 5 முதல் 7 ஆம் வகுப்பு வரையில் தலா ரூ.3,000 மற்றும் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தலா ரூ.5,000 மும் என மொத்தம் 204 பேருக்கு ரூ.8.16 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.