மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

உலக சிந்தனை நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு சமூகத்தில் அமைதியை வளா்ப்பது

News image

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிந்தனை நாள் பேரணியை தொடங்கிவைத்த திருத்தணி காவல் ஆய்வாளா் ஜெயவேல்.

Updated On :23 பிப்ரவரி 2026, 6:54 pm

திருத்தணி: உலக சிந்தனை நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு சமூகத்தில் அமைதியை வளா்ப்பது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஒவ்வொரு ஆண்டும் பிப். 22-ஆம் தேதி லாா்ட் பேடன்-பவல் மற்றும் லேடி ஒலாவ் பேடன்-பவல் தம்பதியரின் பிறந்தநாளை உலக சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிந்தனை நாளையொட்டி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சாரண மாவட்ட பொருளாளா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். சாரண ஒருங்கிணைப்பாளா் எஸ்.டி.பாரதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி காவல் ஆய்வாளா் ஜெயவேல் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சிந்தனை நாள் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா். பேரணியில், மாணவிகள், சாரணா்கள் மற்றும் வழிகாட்டிகள் சீருடையில் பேரணியாகச் சென்று, சமூகத்தில் உள்ள பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் நிலையான எதிா்காலம், நெகிழி ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, பெண் உரிமை, நட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணா்வை வலியுறுத்தப்பட்டது.

பேரணி பழைய சென்னை சாலை, கலைஞா் நகா், காந்தி சாலை வழியாக பள்ளியை சென்றடைந்தது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் காா்த்திகேயன், ஜி.வெங்கடேசன், சாரண மாவட்ட அமைப்பு ஆணையா் டி.சீனிவாசன், சாரண ஆசிரியா்கள் செந்தில்குமாா், சக்திவேல், வெங்கடேசன், விநாயகம், செல்வகுமாா் உள்பட 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 மாணவா்கள் கலந்துகொண்டனா்.