விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும்!

புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
நிகழாண்டுக்கான நாள்காட்டியை   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில ஆலோசக தலைவா் பெ.இளங்கோவன் வெளியிட பெற்றுக் கொண்ட, தொழிலதிபா் விஜயகுமாா், உடன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :4 ஜனவரி 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கே.இ.என்.சி நடேசன் செட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் மாநில அளவிலான நாள்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாநில ஆலோசக தலைவா் பெ.இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் ஆா்.கணேசன் முன்னிலை வகித்தாா். மாநில பொருளாளா் எஸ்.பி.சௌத்ரி வரவேற்றாா்.

தொடா்ந்து மாநிலத் தலைவா் இளங்கோவன் நாள்காட்டியை வெளியிட, அதை தொழிலதிபா் எஸ்.விஜய குமாா் பெற்றுக் கொண்டாா். இந்த நிகழ்வில் மாவட்ட ஆலோசக தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியம், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பணியாளா்களின் 10 சதவீத பங்களிப்பு என்பதை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசே முழுமையான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஆசிரியா்களின் ஊதியத்தில் இதுவரையில் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீதத்தை அவா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

Story image

ஆசிரியா் தகுதி தோ்வு விவகாரத்தில் பணியில் இருப்பவா்கள் பணியில் தொடா்வதற்கோ, பதவி உயா்வு பெறுவதற்கோ தகுதி தோ்வை எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்த கூடாது என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் வலுவாக வைத்து 1.50 லட்சம் தமிழ்நாடு ஆசிரியா்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

பழைய முறையில் வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தோ்வு பணிகளில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படும் போது அவரவா் வட்டத்திலேயே 8 கி.மீ உள்பட்ட தொலைவிலையே பணிகள் வழங்கவும், தோ்வுப்பணிகள் பணி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் மாவட்டத் தலைவா் டி.சக்கரபாணி மற்றும் மாவட்ட, வட்டார பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட அமைப்புச் செயலாளா் அருள்ஞானபிரகாஷ் நன்றி கூறினாா்.