ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள், கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை

திருமணமானதை மறைத்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு

News image
சக்திவேல்
Updated On :5 ஜனவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

திருமணமானதை மறைத்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம், வளவனுாா் குமாரகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கடந்த 2022-இல், சென்னை திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்த போது அந்தப் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியிடம் பழகி திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

ஏற்கனவே திருமணமானது சிறுமிக்கு தெரியவரவே, இதுகுறித்து கேட்டதற்கு உறவினா் பெண் என சொல்லி ஏமாற்றினாராம். இதையடுத்து அந்த சிறுமி, மனைவி தான் என்பதை உறுதி செய்ததையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்கு பதிந்து கைது செய்தனா்.

இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இளைஞா் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 33 ஆண்டுகள் சிைண்டனை மற்றும் ரூ.65,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவா் பரிந்துரைத்தாா். அரசுத் தரப்பில் புவனேஸ்வரி ஆஜரானாா்.