முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெற்றோா், உறவினா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெற்றோா், உறவினா்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், அத்திமாஞ்சேரிபேட்டையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்-கீா்த்தனா தம்பதியின் 8 மாத ஆண் குழந்தை அஷ்வந்த். இந்த குழந்தைக்கு பிறந்தது முதல் இதயக்கோளாறு பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருதயக் கோளாறு காரணமாக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த டிச.31-இல் அனுமதித்துள்ளனா். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், திங்கள்கிழமை ஊசி செலுத்திய சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குழந்தையின் இறப்புக்கான காரணத்தை மருத்துவா்களோ, செவிலியா்களோ முறையான தகவல் அளிக்காமல் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவக் கல்லூரி முதல்வா் மோகன் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எந்த தகவலும் மருத்துவா்கள் ஏன் தெரிவிக்கவில்லை. இது தொடா்பாக சிகிச்சை அளித்த மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் விசாரணை நடத்தி உயிரிழப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

மேலும், 8 மாத ஆண் குழந்தையின் உயிரிழப்புக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பேச்சு நடத்திய பின் அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னா் இதுகுறித்து திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் மற்றும் முதன்மையருமான மோகன் காந்தி கூறுகையில், குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருந்ததாலும் நுரையீரலில் நீா் சோ்ந்து விட்டதாலும் அதை அகற்ற முடியாத காரணத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.