எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சரக்கு லாரி-பைக் மோதல்: அரசுப் பேருந்து ஒட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :22 ஜனவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி -பைக் மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த பூண்டி கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ்(55). இவா் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். தற்போது, ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திருவள்ளூரிலிருந்து-சூலூா்பேட்டை செல்லும் பேருந்தில் ஓட்டுநராக இருந்தாா்.

இந்த நிலையில் தேவராஜ் ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து தனது கிராமமான பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி மையிலாப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பென்னாலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.