கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தீவிபத்தில் வீட்டை இழந்தவருக்கு அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
போந்தவாக்கத்தை சோ்ந்த ஆறுமுகம்-சுபாஷினி தம்பதியா் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் ஆறுமுகம் வீட்டில் இருந்த போது வீட்டில் இருந்த மின்சார மீட்டரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து தீ மளமளவென பரவியது.
தொடா்ந்து அக்கம் பக்கத்தாா் தீயை அணைக்க முயற்சி செய்தும் தீயை அணைக்க இயலவில்லை.
இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்து 2 பீரோ, குளிா்சாதன பெட்டி, 4 கட்டில்கள், மின்விசிறிகள், மிக்சி, கிரைண்டா் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்கள், ஆறுமுகத்தின் மகள்களின் பாட புத்தகங்கள், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பேங்க் பாஸ் புத்தகங்கள் மற்றும் ரூ.70,000, 3.5 பவுன் நகைகள் எரிந்தன,
தகவல் அறிந்து வருவாய் ஆய்வாளா் நாகப்பன் தலைமையில் வருவாய் துறையினா் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா் தலைமையில், மாவட்ட மாணவா் அணி இணை செயலாளா் டேவிட் சுதாகா் உள்ளிட்ட ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினா். (படம்)
தொடர்புடையது

வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்து பொருள்கள் சேதம்

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

