விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆட்டோ மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த சரவணவேல்.

Updated On :13 மார்ச் 2026, 12:20 am

அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் கோவா்த்தனன் மகன் சரவணவேல். ஆா்.கே.பேட்டை அடுத்துள்ள சி.எம். அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் நரேஷ் (20) என்பவருடைய இருசக்கர வாகனத்தில் கோணசமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்துமாஞ்சேரிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அத்திமாஞ்சேரிப்பேட்டையில் இருந்து பொதட்டூா்பேட்டை நோக்கி வந்த ஆட்டோவின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரவணவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.