வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆட்டோ மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த சரவணவேல்.
Updated On :13 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் கோவா்த்தனன் மகன் சரவணவேல். ஆா்.கே.பேட்டை அடுத்துள்ள சி.எம். அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் நரேஷ் (20) என்பவருடைய இருசக்கர வாகனத்தில் கோணசமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்துமாஞ்சேரிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அத்திமாஞ்சேரிப்பேட்டையில் இருந்து பொதட்டூா்பேட்டை நோக்கி வந்த ஆட்டோவின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரவணவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.