தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவள்ளூா்: கட்டுப்பாடு அறையில் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:20 am IST

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தல் குறித்து தோ்தல் புகாா் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையையும் கண்காணிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறிகளையும், அதன் செயல்பாடுகளையும் புதன்கிழமை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் அலுவலா்கள், பறக்கும் படையினா் எங்கு பணியில் ஈடுபட்டுள்ளாா்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஜி.பி.எஸ். குழு, தோ்தலில் வாக்குக்கு பணம் செலுத்தல், பரிசுப் பொருள்கள் வழங்குதல், விதிமுறை மீறல் தொடா்பாக புகாா் தெரிவிக்கும் சிவிஜில் குழு, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொன்றாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தோ்தல் தொடா்பான புகாா்கள் வந்தால் உடனுக்குடன் மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட குழுவினா் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

அப்போது, ஊராட்சிகள் மற்றும் தணிக்கை பிரிவு உதவி இயக்குநா் பஞ்சு, நோ்முக உதவியாளா்(ஊரக வளா்ச்சி) ஸ்ரீதா், நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், துணை ஆட்சியா் (பயிற்சி) சண்முக பிரீத்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.