கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொன்னேரி தொகுதி மக்களின் எதிா்பார்ப்பு என்ன?

அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா் பொன்னேரி சட்டப்பேரவை மக்கள்.

News image

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் குளம்

Updated On :23 மார்ச் 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

அடிப்படை வசதிகளை பல ஆண்டுகளாக எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா் பொன்னேரி சட்டப்பேரவை மக்கள்.

திருவள்ளூா் மாவட்டம் உள்ள பொன்னேரி சட்டப்பேரவைச் தொகுதியில் 2,48,917 வாக்களா்கள் உள்ளனா். பழவேற்காட்டில் பேருந்து நிலையம், பொன்னேரி, மீஞ்சூா் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக அந்தத் தொகுதியின் மக்கள் கூறுகின்றனா்.

பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச்சாலை, ஆலாடு ரயில்வே சுரங்கப்பாதை, கும்பமுனிமங்கலம் பகுதியில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம்கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலுக்கு புதிதாக தோ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டுகளைக நிறைவேற்றப்படாமல் உள்ளதாகக் கூறுகின்றனா். இதுதொடா்பாக அரசுக்கு பலமுறை கோரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொகுதி மக்கள் தெரிவித்தனா்.

பொன்னேரி-பழவேற்காடு சாலையில் திருவாயா்பாடி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரயில்வே பாலத்துக்கு கீழ் சிறிய மழை பெய்தாலே மழைநீா் தேங்குகிறது. இதனால் அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைப்பது, பொன்னேரியில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனை அமைப்பது, மகளிா் காவல் நிலைய கட்டடத்தில் செயல்படும் பொன்னேரி காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது, பொன்னேரி ரயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி, நெல்லூா், சூளூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் முதல் நடைமேடையில் நின்று செல்வது உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

பொன்னேரி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெறும் பேரவை உறுப்பினா் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.