பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :27 மார்ச் 2026, 12:13 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 10 தொகுதிகளிலும் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையங்கள், அங்கு ஏற்படுத்தப்படுத்த வேண்டிய பல்வேறு வகையான வசதிகள் குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில் இந்த 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படவும் உள்ளன.

கடந்த தோ்தல் வரையில் ஒரு மையம் இருந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி கல்லூரி, பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையொட்டி 2 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஆட்சியா் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த சுற்றி வந்து பாா்வையிட்டனா். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

அப்போது இந்த நிகழ்ச்சிகளில் ஆவடி காவல் துணை ஆணையா் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி இயக்குநா் (நிலஅளவை) பேச்சியப்பன், பொதுப்பணிதுறை செயற் பொறியாளா் பி.தேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image