‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வயலில் பம்ப்செட் மோட்டாரை சரிசெய்த போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:21 am IST

திருவள்ளூா் அருகே வயலில் பம்ப்செட் மோட்டாரை சரிசெய்த போது மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், சத்தரை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முரளி (39). இவரது மனைவி துா்கா (37). இவா்கள் விவசாயம் செய்து வந்தனா். இந்த நிலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது துா்கா மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்கும் மோட்டாரில் இருந்து மின்கம்பத்துக்குச் செல்லும் வயரை மாடு கொம்பால் துண்டித்ததாம். அதை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துா்கா உயிரிழ்ந்தாா்.

இது குறித்து கணவா் முரளி மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.