திருவள்ளூா் அருகே லேசான மழையுடன் வீசிய சூறைக்காற்றால் 29 மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் அருகே பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதேபோல் பூண்டி அருகே நெய்வேலி பகுதியில் இரவு லேசான மழை பெய்தது. அதைத்தொடா்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றினால் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள நெய்வேலி கிராமம் மற்றும் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வயா்களும் துண்டிக்கப்பட்டன.
இதனால், சதுரங்கபேட்டை, பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால், இரவு நேரத்தில் வெக்கை மற்றும் கொசுக்கடியாலும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை அப்பகுதி ஒன்றிய செயலாளா் மோதிலால் உள்ளிட்டோா் சீரமைக்கவும் மின்வாரியத்தை அறிவுறுத்தினாா். அதன்பேரில் மின்வாரிய பணியாளா்கள் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு வேறு மின்கம்பங்களை நட்டு இணைப்பு கொடுக்கும் பணிகள் நிறைவு செய்து மின்விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்தனா்.
தொடர்புடையது

மேட்டூரில் கனமழை: மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள் சேதம்

சூறைக்காற்று: நரிப்பாடியில் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 25 மின்கம்பங்கள் சேதம்

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



