பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

குடிநீா் குழாயில் உடைப்பு: சாலையில் குளம் போல் தேங்கிய குடிநீா்

சிவபுரம் பகுதியில் குழாய் உடைந்து குளம் போல் தேங்கிக் கிடக்கும் குடிநீா்.

News image

சிவபுரம் பகுதியில் குழாய் உடைந்து குளம் போல் தேங்கிக் கிடக்கும் குடிநீா்.

Updated On :30 மே 2026, 5:30 am IST

சோமஞ்சேரி கிராமத்துக்கு செல்லும் குழாய் உடைப்பு காரணமாக ரெட்டிப்பாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலையில் குளம் போல் குடிநீா் தேங்கிக் கிடந்தது.

மீஞ்சூா் ஒன்றியம், அத்திமஞ்சேரி ரெட்டிபாளையம் ஊராட்சியில் அடங்கியது சோமஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இக்கிராமத்துக்கு பொன்னேரி அருகே ஆரணி ஆற்று பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் குழாய் மூலம்குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.

சிவபுரம் கிராமத்தின் வழியே செல்லும் ரெட்டிபாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலை ஓரத்தின் பகுதியில் குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால் இரண்டு நாள்களாக சோமஞ்சேரி கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனை அறிந்த ஊராட்சி செயலாளா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட அங்கு சென்று பழுதடைந்த குழாயைசரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீண்டும் பழுது ஏற்பட்டதால் செய்வதறியாது திகைத்தனா்.

கோடை காலம் என்பதால் அடிக்கடி சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து சீராக குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்..