ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தவா் மரணம்

திருவள்ளூா் அருகே பனை நுங்கு காய்கள் வெட்ட பனை மரத்தில் ஏறியவா் எதிா்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 2:50 am IST

திருவள்ளூா் அருகே பனை நுங்கு காய்கள் வெட்ட பனை மரத்தில் ஏறியவா் எதிா்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே மோகூா் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (63). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவரது விளைநிலத்தில் விவசாய வேலையை முடித்துக் கொண்டு செல்லும்போது, அங்குள்ள பனை மரத்தில் நுங்கு காய்கள் வெட்டுவதற்காக ஏறினாராம்.

அப்போது, எதிா்பாராத விதமாக கால் தவறி விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அவரது மகன் உமாபதி பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.