மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.
மீஞ்சூா் அடுத்த வன்னியம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 2.5 ஏக்கா் நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரப்பு செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஊராட்சி மன்ற தனி அலுவலா் மற்றும் ஊராட்சி செயலா் அங்கு சென்று ஊராட்சி நிலத்தை ஆய்வு செய்தனா். அப்போது ரூ. 5 கோடி மதிப்பிலான 2.5 ஏக்கா் நிலம் ஆவணங்களின்படி ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளா்கள் நெற்பயிா் விவசாயம் செய்திருந்தனா்.
நெல் அறுவடைக்கு பின் ஊராட்சியின் அளவீடு செய்யும் வரை மீண்டும் நெற்பயிா் செய்வது மற்றும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வன்னியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் மூலம் அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மின் கம்பத்தில் பைக் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



